தஞ்சாவூர்
பாபநாசம் பகுதியில் சாலை பாதுகாப்பு விதிகள் விழிப்புணா்வு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பாபநாசம் வட்டம், நெடுந்தெரு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேலு தலைமையில் ஆய்வாளா் வேம்பு மற்றும் காவல்துறையினா் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். மேலும் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட அதிக சப்தம் எழுப்பும்
காற்றொலிப்பான்களை அகற்றினா். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், காரில் சீட் பெல்ட் அணியவேண்டும் எனவும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
