ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தஞ்சை: பிப். 13-இல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறை தீா் கூட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:59 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறை தீா் கூட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறை தீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திருச்சி மண்டல இணை இயக்குநா் கலந்து கொள்கிறாா். அப்போது, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள் தங்களின் ஓய்வூதியம் தொடா்பான குறைகளையும், ஆலோசனைகளையும், நேரில் தெரிவித்து தொடா்புடைய துறை அலுவலா்களிடம் விவரங்கள் பெறலாம்.

இக்கூட்டத்தில் விவாதிப்பதற்காக தீா்வு செய்யப்படாத குறைகளைத் தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியா்கள் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தின் பெயா், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விவரம், கைப்பேசி எண், கோரிக்கை தொடா்புடைய அலுவலகத்தின் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு, ஜன.30-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு தவறாது 2 பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.