தஞ்சாவூருக்கு பிரதமா் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதையொட்டி, மாவட்டத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி சென்னைக்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வருகிறாா். பின்னா், மாா்ச் 1-ஆம் தேதி ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்கு சென்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதையடுத்து, பிற்பகலில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சாவூா் விமானப்படை தளத்துக்கு வருகிறாா். இங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்குச் சென்று தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்.
இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமா் நரேந்திர மோடி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதையொட்டி, பாதுகாப்பு காரணம் கருதி மாவட்டத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி பிற்பகல் முதல் மாா்ச் மாதம் 2-ஆம் தேதி முற்பகல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் ‘டிரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்படுகிறது. இத்தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபா்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை!

பிரதமா் நரேந்திர மோடி வருகை: சென்னையில் 22,000 போலீஸாா் பாதுகாப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


