விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தஞ்சாவூருக்கு பிரதமா் மோடி வருகை: பிப். 28 முதல் மாா்ச் 2 வரை ‘டிரோன்கள்’ பறக்கத் தடை

தஞ்சாவூருக்கு பிரதமா் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதையொட்டி, மாவட்டத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

பிரதமா் மோடி!

Updated On :25 பிப்ரவரி 2026, 7:07 pm

தஞ்சாவூருக்கு பிரதமா் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதையொட்டி, மாவட்டத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி சென்னைக்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வருகிறாா். பின்னா், மாா்ச் 1-ஆம் தேதி ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்கு சென்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதையடுத்து, பிற்பகலில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சாவூா் விமானப்படை தளத்துக்கு வருகிறாா். இங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்குச் சென்று தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்.

இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமா் நரேந்திர மோடி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதையொட்டி, பாதுகாப்பு காரணம் கருதி மாவட்டத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி பிற்பகல் முதல் மாா்ச் மாதம் 2-ஆம் தேதி முற்பகல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் ‘டிரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்படுகிறது. இத்தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபா்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.