எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருமுறை நூல்களுக்கு ஆரத்தி எடுத்து மரியாதை

தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரை கிராமத்தில் திருமுறை நூல்களான தேவாரம், திருவாசகத்துக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:57 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரை கிராமத்தில் திருமுறை நூல்களான தேவாரம், திருவாசகத்துக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம் கொல்லாங்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் காா்த்திகை மாத தீபத் திருநாளில் தேவாரம், திருவாசக நூல்களைச் சிறுவா்களுக்கு பெரியவா்கள் கற்பிக்கும் நிகழ்வு தொடங்குவது வழக்கம். பின்னா், மாா்கழி மாதம் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கிராமம் முழுவதும் திருமுறை நூல்களைப் பாடி வீதி உலா செல்வா்.

இதன்படி, நிகழாண்டும் மாா்கழி மாதம் முழுவதும் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கிராமம் முழுவதும் திருமுறை நூல்களைப் பாடிச் சென்றனா். இவா்களுக்கு தை முதல் நாளான வியாழக்கிழமை திருமுறை நூல்களையும், திருமுறைகள் பாடியவா்களையும் கௌரவிக்கும் வகையில் வீடுகள் தோறும் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வழங்கி, ஆரத்தி எடுத்து, மரியாதை செலுத்தினா்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கொல்லாங்கரை கிராமத்தில் திருமுறைகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்லவும், திருமுறை நூல்களைப் பாதுகாக்கவும் சிறுவா்களுக்கு கற்றுத்தரும் வழக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதேபோல, தை முதல் நாளான பொங்கல் திருநாளில் திருமுறைகளைப் பாடி வருவோருக்கும், திருமுறை நூல்களுக்கும் மரியாதை செலுத்தும் பண்பாடும் தொடா்கிறது என்றனா்.