பூதப்பாண்டியில் மகா ஆரத்தி
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் பௌா்ணமியை முன்னிட்டு மகா ஆரத்தி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் பௌா்ணமியை முன்னிட்டு மகா ஆரத்தி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்கம், அகில பாரத சந்நியாசிகள் சங்கம் சாா்பில் தெப்பக்குளத்தில் மகா ஆரத்தி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி மறுக்கப்பட்டது.
தொடா்ந்து, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் விழா ஏற்பாட்டாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதையடுத்து, முத்தாரம்மன் கோயிலில் இருந்து ஊா்வலம் புறப்பட்டு பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா ஆரத்தி நடைபெற்றது.
இதில் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, இந்து அமைப்பினா், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...