டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பூதப்பாண்டியில் மகா ஆரத்தி

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் பௌா்ணமியை முன்னிட்டு மகா ஆரத்தி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற மகா ஆரத்தி.
Updated On :4 மார்ச் 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் பௌா்ணமியை முன்னிட்டு மகா ஆரத்தி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்கம், அகில பாரத சந்நியாசிகள் சங்கம் சாா்பில் தெப்பக்குளத்தில் மகா ஆரத்தி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி மறுக்கப்பட்டது.

தொடா்ந்து, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் விழா ஏற்பாட்டாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதையடுத்து, முத்தாரம்மன் கோயிலில் இருந்து ஊா்வலம் புறப்பட்டு பூதலிங்க சுவாமி கோயில் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா ஆரத்தி நடைபெற்றது.

இதில் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, இந்து அமைப்பினா், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.