மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பூதப்பாண்டி கோயிலில் தினசரி அன்னதானம் வழங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, ஸ்ரீ பூதலிங்க சுவாமி கோயிலில் நித்திய அன்னதானம் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்த பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்க நிா்வாகிகள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:51 pm

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, ஸ்ரீ பூதலிங்க சுவாமி கோயிலில் நித்திய அன்னதானம் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து, பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்கத்தின் சாா்பில் இறச்சகுளம் காளியப்பன், வழக்குரைஞா் ரஜினிகாந்த், நாகராஜன், ராஜேஷ் ஆகியோா் புதன்கிழமை சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி குடைவரைக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் தோ்த் திருவிழா நடைபெறும். அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா்.

அதேபோல், மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை கிரிவலத்திலும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா். பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பக்தா்களுக்கு தினசரி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.