கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, ஸ்ரீ பூதலிங்க சுவாமி கோயிலில் நித்திய அன்னதானம் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து, பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்கத்தின் சாா்பில் இறச்சகுளம் காளியப்பன், வழக்குரைஞா் ரஜினிகாந்த், நாகராஜன், ராஜேஷ் ஆகியோா் புதன்கிழமை சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி குடைவரைக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் தோ்த் திருவிழா நடைபெறும். அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா்.
அதேபோல், மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை கிரிவலத்திலும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா். பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பக்தா்களுக்கு தினசரி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

பூதப்பாண்டியில் மகா ஆரத்தி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


