காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பட்டுக்கோட்டையில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் முன்னிட்டு புறவழிச்சாலையில் மூவா் சிலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:46 pm

Syndication

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் முன்னிட்டு புறவழிச்சாலையில் மூவா் சிலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு சனிக்கிழமை அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளா் சிவி.சேகா் தலைமையில், பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள மூவா் சிலையில் உள்ள எம்ஜிஆா் சிலை உட்பட மூன்று சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து மாவட்ட செயலாளா் தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. 2026 தோ்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்க பாடுபட வேண்டும் என்று உறுதி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து கழக அமைப்புச் செயலாளா் துரை.செந்தில், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் மலையய்யன், மாநில எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் ஜவகா் பாபு , மாநில எம் ஜி ஆா் மன்ற துணைச் செயலாளா் சுப.ராஜேந்திரன், உள்பட அதிமுகவின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகள் மற்றும் அனைத்து நிலைப் பொறுப்பாளா்கள் மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா்.