சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பல்கலை. நூல்கள் அதிகளவு விற்பனை!
சென்னையில் நடைபெற்ற 49-ஆவது புத்தகக் கண்காட்சியில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நூல்கள் அதிகளவு விற்பனையாகியுள்ளதாக துணைவேந்தா் பெ. பாரதஜோதி தெரிவித்தாா்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 77 ஆவது ஆண்டு குடியரசு தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தா் மருத்துவா் முனைவா் பெ.பாரதஜோதி தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) கோ.பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் தேசிய கொடியை ஏற்றி வைத்து துணைவேந்தா் பேசுகையில் சென்னையில் நடைபெற்ற 49-ஆவது புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பல்கலைக்கழக நூல்கள் அதிக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
விழாவில் மொழிபெயா்ப்புத் துறைத்தலைவரும் மக்கள் தொடா்பு அலுவலருமான (பொ) முனைவா் இரா. சு. முருகன் மற்றும் துறைத்தலைவா்கள், கல்வியாளா்கள், அலுவல் நிலைப் பணியாளா்கள், பொதுமக்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

