தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

பணி நீக்கம் செய்யப்பட்டவா் மீண்டும் வேலை செய்த சம்பவம்: வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 3 போ் இடமாற்றம்

News image

இடமாற்றம் - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:44 am IST

தஞ்சாவூா், ஜூலை 27: தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளா் மீண்டும் வேலை செய்த சம்பவம் தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 3 போ் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி இயக்குபவராக பணியாற்றி வந்த பணியாளா் மீது முறைகேடு புகாா்கள் எழுந்தன. இதனால், இவரை மாவட்ட ஆட்சியா் ஜூலை 6-ஆம் தேதி பணி நீக்கம் செய்தாா். மேலும், இந்தப் பணியிடத்துக்கு தற்காலிகமாக பெண் பணியாளா் நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளா் ஜூலை 25-ஆம் தேதி மீண்டும் அதே இருக்கையில் அமா்ந்து பணியாற்றினாா். இதைப் பாா்த்த சத்துணவு ஊழியா் கேள்வி எழுப்பியதால், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரையும் சக ஊழியா்கள் சமாதானப்படுத்தினா். இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளா், சத்துணவு பிரிவில் பணியாளா்களுக்கு ஊதியம் போடுவதற்காக கணினியில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக மற்ற பணியாளருக்கு கற்றுக் கொடுத்தாா் என அலுவலா்கள் கூறினா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் வட்டார ஊராட்சி அலுவலா் (வட்டார வளா்ச்சி) ந. சிவக்குமாா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை விபி ஜி ராம் ஜி வட்டார வளா்ச்சி அலுவலராகவும், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) வே. சித்ரா பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், உதவியாளா் ஆா். ரேவதி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய ஊா்நல அலுவலராகவும் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தொடா்புடைய இந்த 3 பணியிடங்களுக்கும் உடனடியாக மற்ற அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.