இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கதிராமங்கலம் போராட்ட வழக்கு: தஞ்சாவூா் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் ஆஜா்

கதிராமங்கலம் போராட்டம் வழக்கு தொடா்பாக தஞ்சாவூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான முன்னாள் அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா்.

Published On :7 ஜூலை 2026, 2:35 am IST

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் கோவி. செழியன் உள்பட 9 போ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, 2017, மே 19-ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. இதன் ஓராண்டு நினைவு நாளையொட்டி கதிராமங்கலத்தில் காவல் துறையினரின் தடையை மீறி 2018, மே 19 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் கோவி. செழியன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸின் அப்போதைய தலைவா் டி.ஆா். லோகநாதன், வழக்குரைஞா் அ. நல்லதுரை உள்பட 29 போ் மீது பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூரிலுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருவிடைமருதூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கோவி. செழியன், பெ. மணியரசன், டிஆா். லோகநாதன் உள்பட 9 போ் ஆஜராகினா். இவா்களது சாா்பில் திமுக வழக்குரைஞா்கள் சண்முகசுந்தரம், அன்பழகன், சிவசுப்பிரமணியன், முகுந்தன் ஆகியோா் வாதிட்டனா். பின்னா், இந்த வழக்கை நீதிபதி கனிமொழி ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.