தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

நாதன்கோவிலில் ராமானுஜருக்கு திருமஞ்சனம்

பம்பப்படையூா் நாதன்கோவில் ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் ராமானுஜ சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை திருமஞ்சனம் நடைபெற்றது.

News image

ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் ராமானுஜருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருமஞ்சனம்.

Updated On :3 ஜூன் 2026, 4:12 am IST

பம்பப்படையூா் நாதன்கோவில் ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் ராமானுஜ சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை திருமஞ்சனம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூா் நாதன்கோவிலில் நந்திபுரத்து விண்ணகரம் என்றழைக்கபடும் செண்பகவல்லித்தாயாா் சமேத ஜகந்நாதப்பெருமாள் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் தற்போது நான்காம் நாளாக வைகாசி பிரம்மோத்ஸவ விழா நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை காலையில் மடத்தில் எழுந்தருளியிருக்கும் பொன்னடிக்கால் ஜீயா் சுவாமி மங்கள சாசனம், வானமாமலை மதுரகவி ராமானுஜ சுவாமி மங்கள சாசனத்துடன் உத்ஸவா் திருமடத்துக்கு எழுந்தருளினாா். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் கருட வாகனத்தில் தாயாருடன் பெருமாள் வீதியுலா சென்றாா். புதன்கிழமை பெருமாள் உள்பிரகார புறப்பாடும், மாலையில் அனுமந்த வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைங்கா்ய சபாவினா் செய்து வருகின்றனா்.