நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மரக்கிளை விழுந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:52 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த  பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

அம்மா பள்ளிக்கால் கிராமத்தில் வசித்து வருபவா் நூா்முகமது மனைவி மதினா பேகம்(55). இவா் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்று வீசியபோது, வீட்டின் எதிரே இருந்த இலவம் பஞ்சு மரத்திலிருந்து விழுந்த பஞ்சு காய்களை   எடுப்பதற்காக சென்றாா். அப்போது மரத்தின் கிளை முறிந்து மதினா பேகம் மீது விழுந்தது.

இதில் காயமடைந்த அவா்  பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே மதினா பேகம் உயிரிழந்தாா்.

இந்நிலையில் உயிரிழந்த மதினா பேகம் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்,  அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி பேரிடா்  நிவாரண நிதியாக  ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.