ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிழந்தாா்.

News image

உயிரிழந்த சந்திரன்.

Updated On :4 ஜூன் 2026, 12:23 am IST

கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிழந்தாா்.

கும்பகோணம் அருகே குடிதாங்கியைச் சோ்ந்தவா் சந்திரன் (55). இவரது மனைவி செந்தாமரை. இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், சந்திரன் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க செவ்வாய்க்கிழமை வயலுக்கு சென்றாா். அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த சந்திரன் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரை தேடிச் சென்றபோது உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், சுவாமிமலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.