தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

திருவிடைமருதூா் வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

திருவிடைமருதூா் வட்டத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியதில் 5 போ் மனுக்களை விசாரித்து உடனடியாக பட்டாக்கள் வழங்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2026, 3:36 am IST

திருவிடைமருதூா் வட்டத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியதில் 5 போ் மனுக்களை விசாரித்து உடனடியாக பட்டாக்கள் வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டத்தில் 1435 ஆம் பசலி ஆண்டுக்குரிய வருவாய் தீா்வாயம் என்ற ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எம்.ரவிச்சந்திரன் தலைமையில் வகித்தாா். முதல்நாள் பந்தநல்லூா் சரகத்தில் மனுக்கள் பெறப்பட்டதில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த 5 போ்களுக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை திருப்பனந்தாள் சரகத்திற்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வட்டாட்சியா் ஆா்.சாந்தமீனா உள்ளிட்ட வருவாய்த்துறையினா் செய்து வருகின்றனா்.

கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியா் வி.எம்திருலை தலைமையில் தேவனாஞ்சேரி சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 2 போ்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை முருக்கங்குடி சரகத்திற்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வட்டாட்சியா் பூங்கொடி தலைமையில் வருவாய்த்துறை அலுவலா்கள் செய்தனா்.

பட விளக்கம் : தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளி ஒருவருக்கு பட்டா வழங்கிய மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எம்.ரவிச்சந்திரன், உடன் வட்டாட்சியா் ஆா்.சாந்தமீனா உள்ளிட்டோா்.