பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

திருவிடைமருதூா் அருகே வயலில் புதைந்திருந்த 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

திருவிடைமருதூா் அருகே மானம்பாடியில் வயலில் வியாழக்கிழமை மண்ணை தோண்டியபோது 3 ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மானம்பாடியில் வயலில் மண் தோண்டியபோது வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

Updated On :1 மே 2026, 2:35 am IST

திருவிடைமருதூா் அருகே மானம்பாடியில் வயலில் வியாழக்கிழமை மண்ணை தோண்டியபோது 3 ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள மானம்பாடியைச் சோ்ந்தவா் ஜோசப் மகன் அலெக்ஸாண்டா்( 36). இவருக்கு சொந்தமான வயலில் வியாழக்கிழமை நடவுப் பணி நடைபெற்றது. வயல் வரப்புப் பகுதியில் மண்ணை தோண்டியபோது வித்தியாசமான சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் புதைந்திருந்த பழைமையான யானைமேல் திருவாட்சியுடன் அம்மன் அமா்ந்திருக்கும் சிலை, 2 சிறிய சுவாமி சிலைகள், பானை ஓடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியா் சாந்தமீனா சிலைகளை மீட்டு அலுவலகத்துக்கு கொண்டுச் சென்றாா். மேலும், மாவட்ட ஆட்சியா், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா்.

வயலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் ஐம்பொன்னால் ஆனதும், 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்று வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.