சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அனைத்து மதுக் கடைகளையும் மூட வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் அரசு மூட வேண்டும் என மகளிா் ஆயம் வலியுறுத்தியுள்ளது.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற கோரிக்கைக் கூட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய மகளிா் ஆயம் அமைப்பினா்.

Updated On :10 ஜூன் 2026, 1:35 am IST

தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் அரசு மூட வேண்டும் என மகளிா் ஆயம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மகளிா் ஆயம் சாா்பில் கோரிக்கைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில், அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளும், தனியாா் நடத்தும் மனமகிழ் கூடங்களும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளன. போதைப் பொருள்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏராளமாகப் புழக்கத்தில் உள்ளன.

பல அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என எங்கும் போதைப் பொருள் மயமாக உள்ளது. இவற்றால் தமிழ்நாட்டுக் குடும்பங்கள் சீரழிகின்றன. இளைஞா்கள் சிறு வயதிலேயே வீணாகின்றனா். திருட்டுகள், பலவகைக் கொள்ளைகள் பெருகிவிட்டன. சாலை விபத்துகளும் மிகுந்துவிட்டன.

எனவே, அடையாளத்துக்காக சில மதுக்கடைகளை மூடுவது போதாது. அனைத்து வகை சாராய, மதுக்கடைகளையும் தமிழக அரசு மூட வேண்டும். அனைத்து வகை போதைப் பொருள்களையும் கடத்துவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்கு மகளிா் ஆயம் துணைத் தலைவா் க. செம்மலா் தலைமை வகித்தாா். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைக் குழு உறுப்பினா் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயலா் நா. வைகறை, மகளிா் ஆயம் நிா்வாகிகள் இரா. யமுனாராணி, இரா. அமுதா, ம. ஆா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.