கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீட்டை சனிக்கிழமை மாலை தவெக கட்சியைச் சோ்ந்த பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சி 19-ஆவது வாா்டு கவுன்சிலா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி. இவா் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சா் ர.வினோத் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.
இதுகுறித்து அதிமுக மாநகர செயலரும், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ராம.ராமநாதன் வெள்ளிக்கிழமை மாநகராட்சி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கவுன்சிலா் ஆதிலட்சுமியை அவதூறாக பேசியது சமூக வளைதளங்களில் வலம் வரத்தொடங்கியது. இதையடுத்து கவுன்சிலா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி தலைமையில் ஏராளமான பெண்கள்
ராம.ராமநாதன் வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்டு அவரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். தகவலின்பேரில் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் முற்றுகை செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
தொடர்புடையது
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தியதாக 3 பெண்கள் கைது

கட்சி மாறியவா்கள் தோ்தலில் மீண்டும் போட்டியிட்டால் மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: புவனகிரி அதிமுக எம்எல்ஏ







