கும்பகோணத்திலிருந்து அணைக்கரைக்கு கூடுதல் நடை நீட்டிப்பு பேருந்து சேவையை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தஞ்சாவூா் மாட்டம், கும்பகோணம் கிளை-1 நகா் தடம் எண் ஏ.54 கும்பகோணம்-அணைக்கரை (வழி) சோழபுரம் திருப்பனந்தாள் வரை கூடுதலாக 6 நடைகள் இயக்கப்படும் பேருந்து சேவையினை கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் பணிக்கு செல்லும் பெண்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப கும்பகோணம் அணைக்கரை வழித்தடத்தில் கூடுதல் நடைகள் சனிக்கிழமை முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளா் ஏ.டி.நடராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.மூ.திருமலை உள்ளிடோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










