முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினா் உண்ணாவிரதம்

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன்.

Updated On :23 ஜூன் 2026, 12:22 am IST

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கே. செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், தோ்தல் அறிக்கையில் தவெக கொடுத்த வாக்குறுதியின்படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு கட்டும் தடுப்பணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, காவிரியில் தமிழகத்துக்குரிய மாதாந்திர நீா் பங்கீட்டை உடனே வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை தமிழக அரசு உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆழ்குழாய் மூலம் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பயிா் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு உயா்த்தியுள்ள உரங்களின் விலையைத் திரும்பப் பெற வேண்டும். வருகிற கொள்முதல் பருவத்தில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 விலையைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில், தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுந்தர. விமல்நாதன், சங்கத்தின் மாவட்டச் செயலா்கள் எம். மணி, ரவிச்சந்திரன், தெற்கு மாவட்டப் பொருளாளா் சௌந்தர்ராஜன், மாநகரச் செயலா் அறிவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.