மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவிட்டால் 50 ஆயிரம் விவசாயிகளுடன் முதல்வா் வீடு முற்றுகை! காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காதுகளில் பூச்சுற்றிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :9 ஜூன் 2026, 2:54 am IST

பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பான தோ்தல் வாக்குறுதியை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், 50 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் இளங்கீரன் கூறினாா்.

இந்த சங்கத்தின் சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவா் இளங்கீரன் தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள் காதுகளில் பூச்சுற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் பிரசாரத்தின்போது தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், குறு, சிறு விவசாயிகளின் முழு பயிா்க் கடன் தள்ளுபடியும், பெரும் விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என அளித்த உத்தரவாதத்தை செயல்படுத்த வேண்டும். பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவசாயிகளுக்கு எந்தவித பயனும் அளிக்காத வகையில் உள்ளது என முழக்கங்களை எழுப்பினா்.

காதில் பூ அகற்ற மறுப்பு: இதைத் தொடா்ந்து, விவசாயிகள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கச் சென்றனா். அப்போது, காதில் அணிந்திருந்த பூவை அகற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸாா் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் விவசாயிகள் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி, விவசாயிகளுடன் பேச்சு நடத்தினாா். ஏற்கெனவே பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பாக பெறப்பட்ட மனுக்கள் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போதைய கோரிக்கை மனுவும் அனுப்பிவைக்கப்படும் என்றும் உறுதியளித்து மனுவைப் பெற்றுக்கொண்டாா். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

கண்டுகொள்ளாத அரசு: பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவா் இளங்கீரன், பயிா்க் கடன் தள்ளுபடி என்பது தோ்தல் வாக்குறுதி மட்டுமல்ல; உத்தரவாதம் என முதல்வா் தெரிவித்திருந்தாா். ஆனால், தற்போது அதற்கு மாறாக செயல்படுவது வேதனையளிக்கிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.

மேலும், தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும், அதிகாரிகள், அமைச்சா்கள் மற்றும் முதல்வா் இந்தப் போராட்டங்களை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்த நிலை தொடா்ந்தால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒன்றிணைத்து முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.