ஒரத்தநாடு அருகே அண்ணனின் 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சித்தப்பாவை போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்கில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவுக்காரரான அண்ணன் வீட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்தவரும், குற்றப்பின்னணி உடையவருமான புலி சரவணன் என்கிற சரவண குமாா் (23) தங்கினாா். அப்போது, அவரது அண்ணன் மகளான ஐந்து வயது சிறுமியின் தாய் குளிக்கச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதைத்தொடா்ந்து, சிறுமியிடம் மாற்றத்தை அறிந்த அவரது தாய் அவரிடம் விசாரித்தபோது, சரவண குமாா், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கன்னிகா மற்றும் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சித்ரா ஆகியோா் தலைமறைவாக இருந்த சரவணகுமாரை வியாழக்கிழமை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, சரவண குமாா் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் கைது

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் போக்ஸோவில் கைது

போக்ஸோ வழக்கில் மதபோதகா் கைது
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

