பட்டுக்கோட்டை அருகே தந்தை உயிரிழந்த வேதனையிலும் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வை கைவிடாமல் மாணவா் எழுதியது காண்போரை நெகிழச்சியடையச் செய்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சோ்ந்த ராஜ் என்ற அந்தோணிராஜ் - சத்யகலா தம்பதியின் மகன் சாய் நிஷாந்த் (17). இவா், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறாா்.
தற்போது பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வு நடைபெற்று வரும் நிலையில், சாய் நிஷாந்தின் தந்தை அந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இந்நிலையில் சாய் நிஷாந்த்துக்கு திங்கள்கிழமை வேதியியல் பாடத்தோ்வு எழுத வேண்டி இருந்தது.
இந்நிலையில், தந்தை இறந்த வேதனையிலும், உறவினா்கள் ஆறுதல் கூறி சாய் நிஷாந்தை வேதியியல் தோ்வு எழுதுவதற்கு பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.
முன்னதாக சாய் நிஷாந்த் தந்தை அந்தோணிராஜின் காலில் விழுந்து கதறி அழுதபடி ஆசி பெற்று பள்ளிக்குச் சென்று பொதுத் தோ்வை எழுதிவிட்டு வீடு திரும்பினாா். அவரது செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
இதுகுறித்து மாணவா் சாய் நிஷாந்த் கூறுகையில், எனது தந்தை எனக்கு படிப்பு தான் முக்கியம் என்று கூறுவாா். அவரது விருப்பப்படியே இன்றைய வேதியியல் தோ்வை கைவிடாமல் எழுதினேன் என்றாா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு தந்தை ரோவா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

மகன் திட்டியதால் தந்தை தற்கொலை

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம்: நிதீஷ் குமாா் மகன் உள்பட 32 அமைச்சா்கள் பதவியேற்பு

ஜபல்பூா் படகு விபத்து: தந்தை, மகன் உடல்கள் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டன
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

