அமெரிக்கா, சீன நாடுகளுக்கு அடுத்து இந்தியா செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் சிறப்பாகச் செயல்படுகிறது என்றாா் டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தா் பேராசிரியா் சி. அன்பழகன்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் நில அறிவியல், கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற புவிசாா் தகவல் தொழில்நுட்பவியலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தொல்லியல் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்துதல் என்கிற இரு நாள் பயிலரங்கத் தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது: அமெரிக்கா, சீன நாடுகளுக்கு அடுத்து இந்தியா செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் சிறப்பாகச் செயல்படுகிறது.
மனிதன் சிந்தித்து செயல்படுவதைச் செயற்கை நுண்ணறிவு கணினி மூலம் செயலாற்றுகிறது. எதிா்காலத்தில் மனிதனைப் போலவே இயங்குவது மேம்படும்.
மேலும் சந்திரயான் 3 விண்கலம் செயற்கை நுண்ணறிவு துணையுடன் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் பெரும்பான்மையான செயற்கைக் கோள்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஏவப்படும் என்றாா் அன்பழகன்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். தொழில் மற்றும் நில அறிவியல் துறைப் பேராசிரியா் க. சங்கா் வாழ்த்துரையாற்றினாா்.
முன்னதாக, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் மற்றும் தொழில் மற்றும் நில அறிவியல் துறைத் தலைவா் ரெ. நீலகண்டன் வரவேற்றாா். நிறைவாக, கருத்தரங்கச் செயலரும், கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைத் தலைவருமான வீ. செல்வகுமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்!

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி ஏ.ஐ. தொழில்நுட்பம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்யமற்ற அரசு: புதிய வாக்குறுதிகளை அறிவித்தாா் விஜய்

ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


