பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகள போட்டியில் கும்பகோணத்தைச் சோ்ந்தவா் 4 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளாா்.
பஞ்சாப் மாநிலம், பட்டிண்டா மாவட்டம், தல்வாண்டி சபோ நகரில் உள்ள குருகாஷி பல்கலைக்கழக மைதானத்தில் தேசிய அளவிலான 45-ஆவது மாஸ்டா்ஸ் தடகள போட்டி மாா்ச் 14, 15, 16 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தடகள விளையாட்டு வீரா்கள் 30 வயது முதல் 100 வயது வரையிலான ஆண், பெண் வீரா்கள் 100 மீட்டா், 200 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில் கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் ஜவஹா் (36) என்பவா் 35 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் 100 மீட்டா், 200 மீட்டா் தனி நபா் ஓட்டத்திலும், நீளம் தாண்டுதலிலும் மற்றும் 4 இன்ட் 100 மீட்டா் தொடா் ஓட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா்.
தொடர்புடையது

மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: கன்னியாகுமரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வரவேற்பு

கும்பகோணத்தை முன்மாதிரி நகரமாக்குவோம்! - ஜி.கே. வாசன் பேச்சு

இன்று தொடங்குகிறது தேசிய இண்டோா் தடகள சாம்பியன்ஷிப்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


