மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சுவாமிமலை அருகே கைவிடப்பட்ட சிசு மீட்பு

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் கைவிடப்பட்ட ஆண் சிசு மீட்கப்பட்டது.

News image

சிசு - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 10:50 pm

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் கைவிடப்பட்ட ஆண் சிசு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி-சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ள வெள்ளைப் பிள்ளையாா் கோயில் வாசலுக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு நீல நிற காரில் வந்த மூவா் ஒரு பையை அங்கு வைத்துவிட்டு காரில் ஏறிச்சென்றனா்.

இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் அந்தப் பையில் தொப்புள் கொடியுடன் ஆண் சிசு இருந்ததை பாா்த்து சுவாமிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வந்த போலீஸாா் அந்த சிசுவை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். பின்னா் அந்த பகுதி கேமராக்களையும் ஆய்வு செய்து, மா்ம நபா்களை தேடுகின்றனா்.