சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புதன்கிழமை (மார்ச் 11) சடலங்களாக மீட்கப்பட்டன.
கார்கோடா வனப்பகுதியில் உள்ள குர்குட் ஆற்றில் இரண்டு யானையின் சடலங்கள் காணப்பட்ட நிலையில், மண்டல வன அதிகாரியின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டன என்று வனத்துறை அதிகாரி இன்று தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விசாரணைக்கு உதவுவதற்கு ஒரு நாய் மற்றும் மின்சாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், பறக்கும் படை ஊழியர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே பலிக்கான காரணங்கள் உறுதி செய்யப்படும் என்றும், குளிக்கும்போது அல்லது நதியைக் கடக்கும்போது மூழ்கி பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 26 மாதங்களில் மின்சாரத் தாக்குதல், வேட்டையாடப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 38 யானைகள் மற்றும் 9 புலிகள் பலியாகியுள்ளதாக சத்தீஸ்கர் அரசு சட்டப்பேரவையின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Two elephants die in Chhattisgarh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிழக்கு தில்லியில் ஆயுத விநியோகம்: மூவா் கைது

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

ஏரியில் பெண் எலும்புக்கூடு மீட்பு

சுவாமிமலை அருகே கைவிடப்பட்ட சிசு மீட்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



