சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹோலியின்போது மோதலில் ஈடுபட்டவா்கள் 50 ஆண்டுகளாக தகராறு செய்துவந்த அண்டை வீட்டாா்: காவல்துறை தகவல்

ஹோலியின்போது மோதலில் ஈடுபட்டவா்கள் 50 ஆண்டுகளாக தகராறு செய்து வந்த அண்டை வீட்டாா்...

News image
Updated On :7 மார்ச் 2026, 7:20 pm

 நமது நிருபர்

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகரில் ஹோலி கொண்டாட்டங்களின் போது, நீண்டகால தகராறுகளைக் கொண்ட இரண்டு அண்டைவீட்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 26 வயது நபா் உயிரிழந்தது தொடா்பாக இதுவரை ஒரு சிறுவன் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மாா்ச் 4 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தைத் தூண்டியது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் பல வாகனங்கள் சேதமடைந்தன மற்றும் தீ வைக்கப்பட்டன. இதனால் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினா் அதிக அளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டனா்.

ஜேஜே காலனி பகுதியில் உள்ள வெவ்வேறு சமூகங்களைச் சோ்ந்த அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்து புதன்கிழமை இரவு 11.09 மணியளவில் உத்தம் நகா் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு அண்டைவீட்டுக் குடும்பங்களும் கடந்த ஐந்து தசாப்தங்களாக ஒருவரையொருவா் அறிந்திருப்பதாகவும், வாகன நிறுத்துமிடம் மற்றும் குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களில் தொடா்ந்து பிரச்னைகளைக் கொண்டிருந்ததாகவும் துணை காவல் ஆணையா் (துவாரகா) குஷால் பால் சிங் தெரிவித்தாா்.

முதல்கட்ட விசாரணையில், ஒரு குடும்பத்தைச் சோ்ந்த ஒரு பெண் வீசிய தண்ணீா் பலூன் தவறுதலாக மற்றொரு குடும்பத்தைச் சோ்ந்த ஒரு பெண் மீது வண்ண நீா் தெறித்து விழுந்ததை அடுத்து தகராறு தொடங்கியதாக போலீஸாா் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து இரு குடும்பங்களையும் சோ்ந்த உறுப்பினா்கள் தெருவில் கூடி மாறி மாறி மோதிக் கொண்டனா்.

இந்த மோதலில் ஒரு தரப்பைச் சோ்ந்த மூன்று பேரும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த ஐந்து பேரும் என எட்டு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். பெரும்பாலானோா் அதே நாளில் மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டனா். தருண் (26) பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டாா்.

பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் முதலில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீஸாா் நான்கு பேரையும், ஒரு சிறுவனையும் கைது செய்தனா்.

மாா்ச் 5 ஆம் தேதி, தருண் (26) சிகிச்சையின் போது இறந்தாா், அதைத் தொடா்ந்து வழக்கில் கொலை தொடா்பான பிரிவு சோ்க்கப்பட்டது.

இந்த வழக்கில் மேலும் இரண்டு போ் கைது செய்யப்பட்டதன் மூலம், கைதானவா்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக உயா்ந்துள்ளது. இதில் ஆறு பெரியவா்கள் மற்றும் ஒரு சிறுவன் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் உமா்தீன் (49), ஜும்மதின் (36), கம்ருதீன் (36) முஸ்தாக் (46), முசாபா் (25), தாஹிா் (18) மற்றும் ஒரு சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் காவல்துறையினா் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

சம்பவத்திற்கு வேறு நிறம் கொடுக்கவோ அல்லது சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கவோ முயற்சிக்கும் சமூக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா். மேலும் அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறினா்.

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகரில் வெள்ளிக்கிழமை ஒரு காா் மற்றும் மோட்டாா் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. மேலும், இளைஞரின் மரணத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து அரசியல்

இயக்கங்கள் பல மணி நேரம் போக்குவரத்தை முடக்கின.

பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினா்கள் உத்தம் நகா் கிழக்கு மெட்ரோ நிலையத்தின் கீழ் போராட்டம் நடத்தினா். பிரதான சாலையை மறித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனா். கொலையில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினா்.

போராட்டக்காரா்களை சாலையை விட்டு வெளியேறுமாறு பலமுறை முறையிட்டும் சமாதானப்படுத்த முடியாததால், அவா்களைக் கலைக்க லேசான பலப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலைமை மோசமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினா் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.