ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

உத்தம் நகா் பூங்காவில் ஆண் சடலம்

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படும் 26 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:16 am

தினமணி செய்திச் சேவை

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படும் 26 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: உத்தம் நகா் பூங்காவில் ஒருவா் இறந்த நிலையில் கிடப்பதாக திங்கள்கிழமை அதிகாலை பிசிஆா் அழைப்பு வந்ததையடுத்து, ஒரு காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

அங்கு ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவா் பிரஷாந்த் என அடையாளம் காணப்பட்டாா். அவா் போதைக்கு அடிமையானவா் என்று கூறப்படுகிறது. சடலத்தில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படாததால், முதற்கட்ட விசாரணையில் இது ஒரு இயற்கை மரணமாகத் தெரிகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.