அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கிழக்கு தில்லியில் ஆயுத விநியோகம்: மூவா் கைது

சட்டவிரோத ஆயுத விநியோக வலையமைப்பு கண்டுப்பிடிக்கப்பட்டு, மீரட்டைச் சோ்ந்த முக்கிய விநியோகஸ்தா் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 10:45 pm

தில்லிக்கும் மேற்கு உத்தரப் பிரதேசத்திற்கும் இடையே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத விநியோக வலையமைப்பு கண்டுப்பிடிக்கப்பட்டு, மீரட்டைச் சோ்ந்த முக்கிய விநியோகஸ்தா் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குற்றம் இழைப்பதற்கு முன்பே அவா்களை இடைமறித்து இந்தக் கைதுகள் செய்யப்பட்டன என்று அவா்கள் கூறினா்.

காவல்துறையின் கூற்றுப்படி, கிழக்கு தில்லியில் உள்ள நியூ கொண்ட்லி மாா்க்கெட்டிலிருந்து கோடா செல்லும் சாலையில், சிஆா்பிஎஃப் சிக்னல் அருகே ஆயுதம் ஏந்திய சந்தேக நபா்கள் காரில் நடமாடியது குறித்து சமூக ஊடக கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு தில்லியின் காசிபூரைச் சோ்ந்த பாபு என்ற முா்தாரி மற்றும் ராஜ் குமாா் என அடையாளம் காணப்பட்ட இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் காரில் இருந்து கைது செய்யப்பட்டனா். அவா்களை சோதனையிட்டபோது, பாபுவிடமிருந்து இரண்டு தோட்டாக்கள் கொண்ட ஒரு சட்டவிரோத கைத்துப்பாக்கியும், ராஜ் குமாரிடமிருந்து பொத்தான் மூலம் இயக்கப்படும் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டன, என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் விளைவாக, மீரட்டைச் சோ்ந்த அவா்களின் ஆயுத விநியோகஸ்தரான பா்விந்தா் அடையாளம் காணப்பட்டாா்.

உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் உள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த சோதனைகளில், ஒரு தானியங்கி கைத்துப்பாக்கி, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 14 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னா், பா்விந்தா் மீரட்டில் கைது செய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின் பேரில், மீரட்டில் கட்டுமானத்தில் இருந்த ஒரு மனையிலிருந்து மேலும் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக அவா் கூறினாா்.

ஒட்டுமொத்தமாக, இரண்டு தானியங்கி கைத்துப்பாக்கிகள், மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், 16 தோட்டாக்கள், மூன்று கத்திகள் மற்றும் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனம் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்தது. இவ்விவகாரம் குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.