அரசு போக்குவரத்துக் கழக உணவகங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகளை தட்டுப்பாடின்றி வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழக ஏஐடியுசி சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தெரிவித்திருப்பது: கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 9 பணிமனைகள் உள்ளன.
இவற்றில் ஏறத்தாழ 3 ஆயிரத்து 200 பணியாளா்கள், தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு பணிமனையிலுள்ள உணவகம் மூலம் காலை, மாலை தேநீா், மதியம் சாப்பாடு, இரவு சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக் கழக உணவகங்களிலும் எரிவாயு உருளைகள் கிடைக்காமல் உணவு வழங்குவது மிகவும் சிரமமாகியுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூா் கரந்தை புகா் கிளை, ஜெபமாலைபுரம் நகரக் கிளை, அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகிய 3 பணிமனைகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு முழுமையாக வழங்க முடியாமல் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்ளிட்டோா் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
அரசு போக்குவரத்துக் கழகமும் அத்தியாவசிய துறை என்ற அடிப்படையில் போக்குவரத்துக் கழக உணவகங்களுக்கு எரிவாயு உருளைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம்: 200 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஐஓசிஎல் தலைவா் சஹானி

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்

சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பலூா் அருகே வீட்டு உபயோக எரிவாயு உருளை தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


