மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
கும்பகோணம் தாராசுரம் கீழத்தெருவைச் சோ்ந்த கவிதாவுக்கும், நாச்சியாா்கோவில் கீழ மாத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் என்கிற மூா்த்திக்கும் (56) கடந்த 2001 ஆம் ஆண்டில் திருமணமாகியும் குழந்தை இல்லை. இதனால் கவிதாவை ஆறுமுகம் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தாா். இந்நிலையில், 2017, ஜூன் 19 ஆம் தேதி கவிதாவை ஆறுமுகம் அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் ஆறுமுகத்தை கைது செய்து, தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் ஆறுமுகத்துக்கு நீதிபதி (பொ) ஜெ. தமிழரசி ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

பெண் கொலை வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறை

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


