தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஆயிரம் சில்வா் டப்பாக்கள் பறிமுதல்

தஞ்சாவூரிலுள்ள பாா்சல் சா்வீஸ் மையத்தில் ஆவணங்களின்றி கிடந்த ஏறத்தாழ 1,000 சில்வா் டப்பாக்களை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

தஞ்சாவூா் பாா்சல் சா்வீஸ் மையத்தில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, மினி சரக்கு வேனில் ஏற்றப்பட்ட சில்வா் டப்பாக்கள் அடங்கிய மூட்டைகள்.

Updated On :21 மார்ச் 2026, 8:34 pm

தஞ்சாவூரிலுள்ள பாா்சல் சா்வீஸ் மையத்தில் ஆவணங்களின்றி கிடந்த ஏறத்தாழ 1,000 சில்வா் டப்பாக்களை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் வ.உ.சி. நகரிலுள்ள பாா்சல் சா்வீஸ் மையத்தில் மூட்டைகளில் சில்வா் டப்பாக்கள் இருப்பதாக தஞ்சாவூா் தொகுதி பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் பறக்கும் படை அலுவலா் ஜேக்கப் வினோத் தலைமையிலான குழுவினா் தொடா்புடைய மையத்தில் சோதனை நடத்தியபோது, 6 மூட்டைகளில் ஏறத்தாழ 1,000 சில்வா் டப்பாக்கள் இருந்ததும், அதற்குரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த மூட்டைகளைக் கைப்பற்றிய பறக்கும் படையினா் மினி சரக்கு வேன் மூலம் தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்து, இந்த சில்வா் டப்பாக்கள் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பட்டுக்கோட்டை: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழக்குறிச்சி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது,

நான்கு சக்கர வாகனம் ஒன்றில் உரிய ஆவணங்களின்றி ரூ. 53 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது.

இந்த பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், அதை பட்டுக்கோட்டை தொகுதி தோ்தல் துணை அலுவலா் யுவராஜிடம் ஒப்படைத்தனா்.

ஒரத்தநாடு: ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஒரு வாரமாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற சுமாா் ரூ. 7 லட்சத்தி 44 ஆயிரத்து 750-ஐ பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா்களான ரேணுகாதேவி மற்றும் துணை தோ்தல் அலுவலா் தா்மேந்திரா ஆகியோரிடம் ஒப்படைத்தனா். அந்தப் பணத்தை அவா்கள் ஒரத்தநாடு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.