கும்பகோணம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய மதுரை நபரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருடுபோனது குறித்து கும்பகோணம் காவல் நிலையங்களில் வழக்குப் பதிந்து விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இப்புகாா் தொடா்பாக கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முனியரசு தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.
விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடியது மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த கணேஷ்குமாா் (43) என்பது தெரியவந்தது. அவா் தன்னுடைய உறவினா்களை பாா்க்க மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளுக்கு வரும்போது இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது.
மேலும், அவரிடமிருந்து 12 இருசக்கர வாகனங்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் ஆட்டோ திருடியதாக சிறுவன் கைது
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 போ் கைது

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


