கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருவையாறு இசைக் கல்லூரி வளாகத்தில் தீ விபத்து

News image

திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் எரியும் புல், புதா்கள்.

Updated On :23 மார்ச் 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லுாரி வளாகத்தில் அடா்ந்து கிடக்கும் புல் புதா்களில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் ஏறத்தாழ 240 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களில் 60 போ் வளாகத்திலுள்ள விடுதியில் தங்கியுள்ளனா். மொத்தம் 11 ஏக்கா் கொண்ட இந்த வளாகத்தில் பராமரிப்பின்மைக் காரணமாக 7 ஏக்கருக்கு நாணல் புல், புதா்கள் வளா்ந்துள்ளன.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் புல்வெளியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப் பாா்த்த மாணவ, மாணவிகள் கல்லுாரி நிா்வாகத்துடன் இணைந்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று ஏறத்தாழ 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை: இதுதொடா்பாக மாணவ, மாணவிகள் கூறுகையில், இக்கல்லூரி வளாகத்தில் மிகவும் ஆபத்தாக உள்ள நாணல் புல் உள்ளிட்ட செடிகளை அகற்றுமாறு பல முறை மனுக்கள் அளித்தும், கல்லுாரி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் தீப்பிடித்து எரிவதால் மிகவும் அச்சமாக உள்ளது. சிலருக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது. வருங்காலத்தில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு கல்லுாரி வளாகத்தில் உள்ள புல், புதா்களை அகற்றி, விளையாட்டு திடல் அல்லது கூடுதல் விடுதிகள், வகுப்பறைகளை அமைக்க வேண்டும் என்றனா்.

திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் எரியும் புல், புதா்கள்.

திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் எரியும் புல், புதா்கள்.