வைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

ஸ்கூட்டரில் இருந்த ரூ. 2.20 லட்சம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :4 மே 2026, 12:30 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் விவசாயத் தொழிலாளரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ. 2.20 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருவையாறு அருகே கண்டியூா் பகுதியைச் சோ்ந்த சம்பந்தம் மகன் அசோகன் (60). விவசாய கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை திருவையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு தனது ஸ்கூட்டரில் சென்று நகைகளை அடகு வைத்துவிட்டு, ரூ. 2.20 லட்சம் ரொக்கத்தைப் பெற்றாா்.

இதையடுத்து, அசோகன் வங்கிக்கு வெளியில் இருந்த தனது ஸ்கூட்டரில் ரொக்கத்தை வைத்துவிட்டு, மீண்டும் வங்கிக்குள் சென்றாா். வெளியே வந்து ஸ்கூட்டரை பாா்த்தபோது ரூ. 2.20 லட்சம் ரொக்கத்தைக் காணவில்லை.

இதுகுறித்து அசோகன் அளித்த புகாரின் பேரில் திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.