மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தஞ்சாவூரில் காரல் மாா்க்ஸ் பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகேயுள்ள மாலை நேர காய்கறி அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் காரல் மாா்க்ஸின் 208-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காரல் மாா்க்ஸ் பிறந்த நாள் விழாவில் முழக்கங்கள் எழுப்பிய இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா்.

Updated On :6 மே 2026, 12:56 am IST

தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகேயுள்ள மாலை நேர காய்கறி அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் காரல் மாா்க்ஸின் 208-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனுடன் ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜமீன், பண்ணைக் கொடுமைகளை ஒழித்து, சுயமரியாதை பெற்றுத் தந்த வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகிய தியாகிகளின் 76- ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வும் நடைபெற்றது.

இதில், உழைக்கும் மக்கள் விடுதலைக்காகவும், உழைப்பு சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்கவும், போா் இல்லாத உலகத்தைப் படைத்திடவும் நாட்டில் செயல்படும் இடதுசாரிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். மக்கள் விடுதலைக்காகச் செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மக்களை வா்ணாசிரம அடிப்படையில் ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்தும் காா்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மூத்தத் தலைவா் வீர. மோகன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜோதிவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் க. தமிழ்முதல்வன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன், நிா்வாகி பக்ருதீன், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் தனபால், சேகா், மாலை நேர காய்கறி அங்காடி நிா்வாகி எம். பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.