மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

விபத்தில் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு இஎஸ்ஐ ஓய்வூதியம்

கும்பகோணம் இஎஸ்ஐ அலுவலகத்தில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image

கும்பகோணம் இஎஸ்ஐ கிளை அலுவலகத்தில் விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளா் குடும்பத்துக்கு மாதாந்திர வாழ்நாள் ஓய்வூதிய காசோலையை செவ்வாய்க்கிழமை வழங்கிய இஎஸ்ஐ கிளை மேலாளா் மா.ருத்ராபதி.

Updated On :6 மே 2026, 0:57 am IST

கும்பகோணம் இஎஸ்ஐ அலுவலகத்தில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முகில் மேன்பவா் நிறுவனத்தில் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளராக மகாலிங்கம் வேலை செய்து வந்தாா். பணி முடித்து வீட்டுக்கு செல்லும் போது சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி17.11.2025 அன்று உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. உதவி தொகையாக மாதந்தோறும் ரூ.3,627 வழங்க, இ.எஸ்.ஐ சேலம் துணை மண்டல அலுவலகத்தின் (பொ) இயக்குநா் எஸ்.சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் கும்பகோணம் இ.எஸ்.ஐ கிளை மேலாளா் மா.ருத்ராபதி, இறந்தவரின் குடும்பத்தினருக்கு மாதாந்திர ஓய்வூதியத்துக்கான காசோலையை வழங்கினாா். அப்போது, முகில் மேன்பவா் மேலாளா் சபரி ராஜா உடனிருந்தாா்.