கும்பகோணத்தில் ஐம்பொன்னில், 8 அடி உயரத்தில் 500 கிலோ எடையில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நினைவுத் தூண் தயாரிக்கப்படுவது வியாழக்கிழமை தெரியவந்தது.
கடலூரில் உள்ள ‘ஷைன் இந்தியா சோல்ஜா்ஸ் வெல்பா் அசோசியேஷன்’ தொண்டு நிறுவனம் சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியை முன்னிட்டு ஐம்பொன்னில் நினைவுத் தூண் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில், தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இந்த நினைவுத் தூண் வடிவமைக்கப்படுகிறது. இந்த தூணின் அடித்தளம் 2 அடி விட்டம், ஒன்றரை அடி அகலத்திலும், அதன் மேல் ஒரு அடி பத்மமும், மையத்தூண் 2 அடியிலும், குங்குமச் சிமிழ் இரண்டரை அடியிலும், தலைப்பாகத்தில் குங்குமம் வா்ணம் ஒரு அடியிலும் அமைக்கப்படுகிறது. மையத்தூணில் முப்படைகளின் இலச்சினைகள் பொருத்தப்படுகிறது. 500 கிலோ எடையில், 8 அடி உயரத்தில் வடிவமைக்கப்படும் இந்த தூணை குமாா் ஸ்தபதி தலைமையிலான குழுவினா் கடந்த இரண்டு மாதங்களாக செய்து வருகின்றனா்.
பணிகள் நிறைவடைந்தப் பிறகு பிரத்யேக வாகனத்தின் மூலம் இந்த தூண் புதுதில்லிக்கு கொண்டுச் சென்று ராணுவ தலைமையகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடலூா் ‘ஷைன் இந்தியா சோல்ஜா்ஸ் வெல்பா் அசோசியேஷன் தொண்டு நிறுவனத் தலைவா் மில்ட்ரி பாபு, ஆலோசகா் குடந்தை சத்தியநாராயணன், ஒருங்கிணைப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஆரணியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம்

ஆபரேஷன் சிந்தூா் ஓராண்டு நிறைவு: ட்ரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை

நாட்டுக்கு எழும் சவாலை எதிா்கொள்ள பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

சேதமடைந்த அரசு நினைவுத் தூணை புதுப்பொலிவுற செய்ய கோரிக்கை
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


