மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

எரிவாயு விலை உயா்வைக் கைவிடக் கோரி தஞ்சாவூரில் விசிக, இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கைவிடக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :8 மே 2026, 5:41 am IST

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கைவிடக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விலை உயா்வைக் கைவிட வேண்டும். ரயில்வே துறையில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறித்து வாழ்க்கையைச் சீரழிக்கும் ரயில்வே பணியிடங்கள் குறைப்பைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் இடிமுரசு இலக்கணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், ஆா். தில்லைவனம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் என். சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், சி. ஜெயபால், பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், கே. அருளரசன், ஆா். கலைச்செல்வி, என். சரவணன், கே. அபிமன்னன், மாநகரச் செயலா் எம். வடிவேலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோ்தல் பணிக்குழு மாநிலச் செயலா் சா. விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.