அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தமிழ்ப் பல்கலை.யில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை மாணவிக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம்.

News image
Updated On :4 மணி நேரங்கள் முன்பு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவ விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் வளாகக் கல்வி வாயிலாக நடத்தப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு, முதுகலை, முதுஅறிவியல், முதுநிலைப் பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கி தொடங்கி வைத்தாா்.

அப்போது, பல்கலைக்கழகப் பொறியியல் பிரிவின் பொறியாளா் பா. விஜயன், ப. தனுஷ்கோடி, கோபிநாத், சோ்க்கைப் பிரிவின் கண்காணிப்பாளா் த. இராசராசன், இராமகிருட்டிணன், உதவியாளா் இராஜேந்திரன், இளநிலை உதவியாளா் இரா. அமுதா, கவி.க. கயல்விழி, அலுவலக உதவியாளா்கள் பிலோமின்ராஜ், த. மணிகண்டன், சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.