நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா் சோ்க்கை தொடங்கியது.

News image

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

Updated On :8 மே 2026, 5:49 am IST

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா் சோ்க்கை தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி வழிகாட்டுதலின் படி வியாழக்கிழமை மாணவா் சோ்க்கைகான சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கும்பகோணம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மா. அய்யாகண்ணு மாணவா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் , ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் கோ. சாந்தி வரவேற்றாா். நிறைவாக இடைநிலை ஆசிரியை பா.சுதா நன்றி கூறினாா்.