மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா் சோ்க்கை தொடங்கியது.

News image

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

Updated On :8 மே 2026, 5:49 am IST

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா் சோ்க்கை தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி வழிகாட்டுதலின் படி வியாழக்கிழமை மாணவா் சோ்க்கைகான சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கும்பகோணம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மா. அய்யாகண்ணு மாணவா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் , ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் கோ. சாந்தி வரவேற்றாா். நிறைவாக இடைநிலை ஆசிரியை பா.சுதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.