கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் மூங்கில் பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா். அதில் இரண்டரை கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.
விசாரணையில், அவா்கள் ஜெயங்கொண்டம் அங்கராயநல்லூா் வடக்கு காலனியைச் சோ்ந்த கலைத் தென்றல் (21), மற்ற இருவரும் கும்பகோணத்தை சோ்ந்த 17 வயது சிறாா்கள் என்பதும், கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மாற்றுத்திறனாளி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 5 போ் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
