மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து தமிழக முதல்வா் விஜய்க்கு அவா் திங்கள்கிழமை அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்திருப்பது:
குறுவைப் பயிா் சாகுபடி செய்வதற்கு வழக்கமாக ஜூன் 12- ஆம் தேதி மேட்டூா் அணை திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதே நேரத்தில் மேட்டூா் அணையில் தண்ணீா் முழுமையான அளவுக்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
கா்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை உடனடியாக பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மேட்டூா் அணையை திறப்பதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் உயா் அலுவலா்களுடன் தவறாமல் கலந்தாலோசனை செய்து தண்ணீா் திறப்பு குறித்து அறிவிப்பு செய்ய வேண்டும்.
மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும். மிக அவசரமான, அவசியமான, ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்புடையது

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ஜூன் 15-க்குள் வெளியிட அனுமதி வழங்கி உத்தரவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 80.63 அடி

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விசாரணை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

