கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த இணையத் தொடரை வெளியிட வேண்டாமென மத்திய அரசு அறிவுறுத்தல்...

Lawrence Bishnoi

லாரன்ஸ் பிஷ்னோய் - கோப்புப் படம்

Published On :

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த இணையத் தொடரைத் வெளியிட வேண்டாம் என ஜி5 ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிரபல பாடகர் சித்து மூஸேவாலாவின் படுகொலை உள்ளிட்ட ஏராளமான குற்றவழக்குகளில் தொடர்புடைய தாதா லாரன்ஸ் பிஷ்னோய்யின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “லாரன்ஸ் ஆஃப் பஞ்சாப்” எனும் புதிய இணையத் தொடர் வரும் ஏப். 27 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற கொடூரமான நபர்கள் போற்றப்படக் கூடாது எனவும்; இந்த இணையத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த வியாழக்கிழமை (ஏப். 23) அன்று கடிதம் எழுதியிருந்தார்.

இத்துடன், இந்த விவகாரம் குறித்து அமரிந்தர் சிங் ராஜா வாரிங் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். மேலும், இந்த தொடரைத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி சமூக நல ஆர்வலர்கள் சிலரும் பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், தாதாக்கள் மற்றும் குற்றவாளிகள் போன்ற நபர்கள் குறித்த திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை வெளியிட வேண்டாமென ஜி5 ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் இன்று அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தின் துணை இயக்குநர் க்ஷிதிஜ் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில்,

“வன்முறையைத் தூண்டக்கூடிய அல்லது பொது அமைதிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் கும்பல் தலைவர்கள், குற்றவாளிகள் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் மற்றும் ஆவணப்படங்களை வெளியிடுவதற்கு முன்னதாக போதிய முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஓடிடி தளங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த இணையத் தொடரில் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் சித்திரிப்புக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பஞ்சாப் மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளதாகவும்; இதனால், குற்றவாளிகளைப் போற்றக் கூடிய உள்ளடகங்களைத் தவிர்க்க வேண்டுமெனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Summary

Central Government has advised the ZEE5 not to release a web series based on Lawrence Bishnoi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.