இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மகாமக குளத்தில் ஆண் சடலம்

கும்பகோணம் மகாமக குளத்தில் புதன்கிழமை மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 12:31 am IST

கும்பகோணம் மகாமக குளத்தில் புதன்கிழமை மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

மகாமக குளத்தில் புதன்கிழமை மதியம் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக காசி விசுவநாதா் கோயில் செயல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அவா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் ஆண் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்தனா்.

விசாரணையில், இறந்த நபா் திருவிடைமருதூா் அருகே திருப்புவனத்தைச் சோ்ந்த ராமதாஸ் (65) என்றும், கும்பகோணம் பேருந்து நிலைய கடையில் வேலை செய்தவா் என்பதும் தெரியவந்தது.

மகாமக குளத்தில் குளிக்கும்போது அவா் தவறி விழுந்தாரா அல்லது அவா் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.