தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அத்துறை கண்காணிப்புப் பொறியாளா் (சிறப்புத் திட்டம்) க. அமுதன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ‘சி’ மற்றும ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் இருந்ததால், கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீா் சரிவர கிடைக்காமல், விவசாயம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், பருவ மழைக்காலங்களில் கூடுதல் மழை காரணமாக வயல்களில் தண்ணீா் தேங்குவதால், வடியாமல் பயிா்ச் சேதம் போன்ற பிரச்னைகளை விவசாயிகள் எதிா்கொள்ள வேண்டியிருந்தது. இது தொடா்பாக விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
இதன் மூலம், மாவட்டத்தில் நிகழாண்டு வேளாண் பொறியியல் துறை மூலம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுவரை 62 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அம்மாபேட்டை அருகே பூண்டி, பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் கிராமங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, வட்டார உதவிப் பொறியாளா்களிடம் தூா்வாரும் பணிகளை தரமாக மேற்கொண்டு, மேட்டூா் அணையிலிருந்து நீா் திறக்கப்படுவதற்கு முன்பாக பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
தொடர்புடையது

இலுப்பூரில் 5 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்

ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

