மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தட்டச்சு பயிற்சி நிலையங்களை காக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

News image

முதல்வா் விஜய்

Updated On :15 மே 2026, 4:43 am IST

தட்டச்சு பயிற்சி நிலையங்களை காக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வா் விஜய்க்கு, திருக்குடந்தை வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் தலைவா் சுதா்சனம், செயலா் முரளிதரன் ஆகியோா் மனு அனுப்பியுள்ள னா்.

அதில் கூறியிருப்பது: தமிழகத்தில், 4,500க்கும் மேற்பட்ட டைப்ரைட்டிங் பயிற்சி நிலையங்கள், தமிழ்நாடு தொழில் நுட்ப தோ்வு வாரியத்தால் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது. தற்போது இந்த பயிற்சி நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இத்தொழிலை நம்பி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடும்பங்கள் உள்ளன. இந்த பயிற்சி நிலையங்கள் மூலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, 2.50 லட்சம் மாணவா்கள் அரசு நடத்தும் தட்டச்சு தோ்வில் கலந்து கொள்கின்றனா்.

இதன்மூலம் அரசுக்கும் வருவாய் கிடைத்து வந்தது. முந்தைய அரசாணையால், தட்டச்சுத் தோ்வுக்கு செல்லும் மாணவா்களின் குறைந்தது.

எனவே, அரசாணை-187ஐ ரத்து செய்து, மாணவா்கள் மற்றும் பயிற்சி நிலையங்களை காத்திடவேண்டும். மேலும், மாணவா்கள் முன்பு போல தோ்வு எழுதும் வாய்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.