நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வேலைவாய்ப்பகப் பதிவு தொடா்பான போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம்: தஞ்சை ஆட்சியா் அறிவுறுத்தல்

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு தொடா்பான போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 நிமிடங்கள் முன்பு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு தொடா்பான போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

வேலைவாய்ப்புத் துறையின் வழியாக வழங்கப்படும் சேவைகளான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு புதுப்பித்தல், கூடுதல் கல்வி தகுதி, பதிவு செய்தல், முகவரி மாற்றம், காலிப்பணியிடங்களைப் பரிந்துரை செய்தல், தொழில்நெறி வழிகாட்டுதல், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகைத் திட்டம் போன்றவை எவ்வித கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த அனைத்து சேவைகளையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் அளவில் பதிவுகள் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சேவைகளை வாட்ஸ்ஆப், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் காணொலிகள் வாயிலாக கட்டணத்தின் அடிப்படையில் செய்து தருவதாக விளம்பரங்கள் வருகின்றன. எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகா்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம்.