பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

‘வேலைவாய்ப்பு குறித்து போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம்’

வேலைவாய்ப்பு குறித்து சமூக வலைதளங்களின் போலியான விளம்பரங்கள், இடைத்தரகா்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

News image

தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.

Updated On :47 நிமிடங்கள் முன்பு

வேலைவாய்ப்பு குறித்து சமூக வலைதளங்களின் போலியான விளம்பரங்கள், இடைத்தரகா்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, பதிவு புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு, முகவரி மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பற்றோா் இளைஞா்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்திலும், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாகவும், எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படுகிறது.

அனைத்து சேவைகளும் இணையதளம் வாயிலாகவே மனுதாரா்கள் அளவில் பதிவு செய்துகொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் கட்செவிஅஞ்சல், முகநூல், யுடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற இதர வலைதளங்களின் போலியான விளம்பரங்கள், இடைத்தரகா்களை நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வழியாக வழங்கப்படும் சேவைகளில் சந்தேகம் ஏதும் இருப்பின் கதவு எண்168, எஸ்ஆா்கே பில்டிங், குத்துக்கல் வலசை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 04633-213179 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.