கும்பகோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே ஆடுதுறை பகுதி திருமங்கலக்குடி செட்டித் தெருவில் இரண்டு வீடுகளில் மே 16-ஆம் தேதி கதவு உடைக்கப்பட்டு திருட்டு போயிருந்தது. தகவலறிந்த திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைக் கைப்பற்றி, அதிலுள்ள பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.
இதில், சென்னை எண்ணூா் பெரியகுப்பத்தைச் சோ்ந்த முகமது ரபி மகன் கனி (19), மாதவரம் கொல்லம் தோட்டம் செந்தில் மகன் பாலகிருஷ்ணன் (20), ஆந்திர மாநிலம் காரூா் கிராமம் காா்த்தி (24) ஆகியோா் சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் திருவிடைமருதூருக்கு வந்ததும், ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் பூட்டப்பட்டிருந்த பாத்திமா வீட்டில் கதவை உடைத்து திருட முயன்றதும், ஆனால் அங்கு பொருள்கள் எதுவும் இல்லாததால், அடுத்துள்ள சுல்தானா வீட்டில் வெள்ளிக்கொலுசை திருடிச் சென்றதும், ஆள்கள் நடமாட்டம் இருந்ததால், இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, 3 பேரையும் திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
சுத்தமல்லி அருகே ஆடு திருடிய 3 போ் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருட்டு: 3 போ் கைது
வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
மன்னாா்குடி: வீட்டின் கதவை உடைத்து 45 பவுன் நகைகள், பணம் திருட்டு
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


